இந்தியாவில் வெள்ளை ஏகா திபத்தியம் சுமார் 200 ஆண்டு கள் மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி நடத்தியதற்கு எதிராக, பூரண சுதந்திரம் கேட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்து, 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ந்தேதி நாடு சுதந்திரம் அடைந்தது. நிலச்சீர்திருத்தம், உழுபவனுக்கே நிலம், உழைப் பிற்கேற்ற ஊதியம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தியும், வெள்ளைக்கார அரசு பின்பற்றிய வந்த அதே கொள்கையை கடைபிடித்து வந்த காங்கிரஸ் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் கம்யூ னிஸ்ட்டுகள் போராடினார்கள். அன்றைக்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு கம்யூனிஸ்ட்டுகள் மீது கடுமையான அடக்குமுறையை ஏவியதோடு, நாடு முழுவதும் கம்யூ னிஸ்ட்டுகளை கைது செய்து சிறையில் அடைத்தது. 6 மாதம் முதல் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. சிறை நிர்வாகம் கம்யூ னிஸ்ட்டுகளின் மீது கடும் தாக்குதல்களை நடத்தியது. கம்யூனிஸ்ட்டுகளுக்கு புளித்த கஞ்சி, சோளக்களி கட்டி சோறு, குவளையில் சுகாதாரமற்ற குடிதண்ணீர், குளிக்க நார் வழங்கினர். மேலும் டவுசர், கிழிந்த கோணி, அழுக்கான கம்பளி கொடுத்தும் துன்புறுத்தினர். சேலம் சிறையில் அடைத்து வைக்கப்பட்ட கம்யூ னிஸ்ட்டுகளுக்கும் இக்கொடுமை நடத்தப்பட்டது. சிறை நிர்வாகத்தின் இந்நடவடிக்கையை கண்டித்தும், கம்யூ னிஸ்ட்டுகளை அரசியல் கைதிகள் போல் நடத்த வேண்டும்; கிரிமினல் குற்றம் செய்த தண்டனை கைதிகள் போல் நடத்தக்கூடாது என போராடினார்கள். இதை ஏற்க மறுத்த காங்கிரஸ் அரசு இவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி யது. இத்துப்பாக்கிச் சூட்டில் சேலம் அரியாக்கவுண்டம்பட்டி யை சேர்ந்த ஆறுமுகம், தற்போதைய நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையத்தை சேர்ந்த காவேரி முத லியார், விழுப்புரம் மாவட்டம் ஷேக் தாவுத், கேரளாவை சேர்ந்த 19 தோழர்கள் என 22கம்யூனிஸ்ட்டுகள் பலியாகி னர். இச்சம்பவம் நடந்த அச்சிறையில் சூரியம்பாளையம் சேஷாசலம் அவர்களும், சேலம் கே.எஸ்.உத்தமலிங்கம் உள்ளிட்ட தோழர்களும் இருந்துள்ளனர். இவர்கள் சிறை யிலிருந்து விடுதலையான பிறகு, “சிறையில் கம்யூனிஸ்ட்டு களை அரசியல் கைதி போல நடத்தாமல் கிரிமினல் கைதி போல நடத்தினர். அதோடு கிணற்றில் நீர் இறைப்பது, ரோடு ரோலர் இழுப்பது என கடுமையான வேலைகளையும், பல்வேறு இன்னல்களையும் கொடுத்தனர். சிறை நிர்வாகத்தின் இந்நடவடிக்கைகளை கண்டித்து கம்யூனிஸ்ட்டுகள் போராடினோம். அதற்காக அனைத்து கம்யூனிஸ்ட்டுகளையும் ஒரே கொட்டடியில் அடைத்து 1950 பிப்ரவரி 11அன்று சிறை நிர்வாகம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 22 கம்யூனிஸ்ட்டுகள் பலியானார்கள். இவர்களின் உடல்களை கூட அவர்களது உறவினர்களி டம் ஒப்படைக்காமல் அடக்கம் செய்தது சிறை நிர்வாகம்” என்று விவாதித்தனர். இவ்வாறு வீரமரணம் அடைந்த தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வருகிற 11.02.2020 அன்று காலை சேலம் மத்திய சிறைச்சாலை அருகிலிருந்து செங்கொடி ஏற்றி, செந்தொண்டர் அணிவகுப்பும், ஜோதிப்பயணமும் நடைபெறுகிறது. இதனையடுத்து ராம கிருஷ்ணா பார்க் அருகில் உள்ள சேலம் சிறைத்தியாகி கள் நினைவகத்தில் அமைந்துள்ள தோழர் காரல்மார்க்ஸ் சிலை முன்பு மத்திய மதவாத பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கை, குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றிற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.